மகாராஷ்டிராவில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மலைப்பகுதியில் 300 அடி பள்ளத்தில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் டபோலியில் அமைந்துள்ள டாக்டர் பாலசாஹேப் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் 34 பேர், சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மகாபலேஷ்வர் மலைப்பகுதிக்கு பேருந்தில் சுற்றுலா சென்றனர். அம்பெனலி காட் என்ற மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக 300 அடி பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.