தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று(மார்ச்.02) பதவியேற்கின்றனர்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று(மார்ச்.02) காலை 10 மணிக்கு பதவி ஏற்றனர்.
அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி நகராட்சி ஆணையர்களும் , பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் அலுவலர்களும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்கள்.
இந்த பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்கள் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பு ஏற்பார்கள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து,
மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மார்ச்.4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.