நேற்றிரவு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானின் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு சம்பந்தான ரிவ்யூ வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்பான். இவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அங்குள்ள ஓட்டல்கள், ரெஸ்ட்ராண்ட்களில் உள்ள உணவின் சுவை குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.
தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post