”6 குடியரசு தலைவர்களை உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம்” என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புகாழாரம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். சர் சி.வி. ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்தவர்களே. பாலின சமத்துவத்திற்கான கோயிலாகச் சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. வளமான கலாச்சாரம், நாகரீகத்தை கொண்டது தமிழ்நாடு; கோயில் கட்டிடக் கலை, சிற்பக்கலை மனிதக் குலத்தின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது” என்றார்.