உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு மைனர் சிறுவர்கள் வெள்ளிக்கிழமையன்று சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தியும், பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்தும் துன்புறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், 10 மற்றும் 15 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ரா பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கட்டி சௌராஹாவிற்கு அருகிலுள்ள கோழிக்கடையில் மர்ம நபர்களாக் அந்த சிறுவர்கள் தாக்கப்பட்டனர். சிறுவர்களுக்கு சில ஊசிகளும் போடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் அங்கிருந்த நபர்கள் குழந்தகளிடம் தங்களின் உத்தரவைப் பின்பற்றுமாறு சிறார்களை வற்புறுத்துகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, 6 பேர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.