ஆண்களை விட பெண்களே அதிகமா..?
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ள சத்யபிரதா சாகு, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் எனவும் கூறியுள்ளார்.
நவம்பர் 4,5 மற்றும் 18,19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்த அவர், வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என்றும், இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..