ADVERTISEMENT
மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்
மன்னார்குடி அருகே மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆதிச்சபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், 214 பயனாளிகளுக்கு 47 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.
அதில், வருவாய்த்துறையின் சார்பில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவிதொகை, உறுப்பினர் சார்ந்தோர் திருமண உதவிதொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதலுக்கான ஆணையினயும், வேளாண்மைத்துறையின் சார்பில் விதைகள் மற்றும் ஸ்பேயர்களையும், 12.19 இலட்சம் மதிப்பிலான நெல் நடவு இயந்திரமும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ. பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.