தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பெல்ட் டெஸ்ட் தேர்வில் 200 மாணவர்கள் தேர்ச்சி!!
தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பெல்ட் டெஸ்ட் தேர்வில் 200 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 200 பேர் தென்னிந்திய கராத்தே அசோசியேசன் நடத்திய கராத்தே பெல்ட் டெஸ்ட் தேர்வில் கலந்துகொண்டனர். தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கிராண்ட் மாஸ்டர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற தேர்வில் 200 மாணவ, மாணவியர் கராத்தே சிறப்பாக செய்து காட்டி வெற்றி பெற்றனர்.