ADVERTISEMENT
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு…
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது
சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தது.
இதனையடுத்து, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
நாளை முதல் அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 1 வரையும், மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சபரிமலையில் ஜனவரு 15 ஆம் தேதி மகரசங்கரம் பூஜையும், பொன்னம் பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றவுள்ளது.
மகரவிளக்கு பூஜையன்று, சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும் என்றும் ஜனவரி 20-ஆம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.