ADVERTISEMENT
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்,
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையை ஈட்டியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பரப்புரையின்போது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும் என்றும், அடுத்த 100 நாட்களுக்கு புதிய உற்சாகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய அமித்ஷா, அரசியலில் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி சுயசார்பான இந்தியாவை உருவாக்கும் இலக்கில் உள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள், என்றாவது ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.