குஷ்பூவிற்கு எதிராக திரும்பும் மக்கள்..!! அந்த ஒரு வார்த்தையால் சிக்கி கொண்ட குஷ்பூ..!!
திருப்பத்தூரில் நடிகை குஷ்பூவின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக மகளீர் அணியினர் திமுக அரசு வழங்கிய மகளீர் உரிமைத்தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் விதமாக நடிகையும் பாஜக தேசிய மகளீர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கூறியதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு திருப்பத்தூர் திமுக மகளிர் அணி சார்பில் குஷ்பூவின் உருவப் படத்தை துடைப்பத்தால் அடித்தும் குஷ்புக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குஷ்புவின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இந்தப் போராட்டத்தில் திருப்பத்தூர் நகரம் மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கண்மணி திருப்பத்தூர் நகர மகளிரணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மகளிர் அணியினர் மற்றும் திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
அதேப்போல ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி சார்பாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே
100-க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் நடிகை குஷ்புவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு எரித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..