டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!! அமலாக்கதுறை வைத்த ட்விஸ்ட்…!!!
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்ததால்
அந்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்தது.
இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..