இரட்டை இலை சின்னம் யாருக்கு..? உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..?
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அதில் ஆத்திரமடைந்த ஓபிஎஸ், எடப்பாடியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி உத்தரவும் வெளியானது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் குழு பயன்படுத்தக்கூடாது அதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என இடைக்கால தடை விதித்தார்.
அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தொடர் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிமதி அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.
தற்போது பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு என்ற நிலையில் இரட்டைஇலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியே தீருவேன் என கூறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.