கோடைக் காலத்தில் முகம் கருமை நீங்கி, முகம் ஜொலிக்க இத ட்ரைப் பண்ணுங்க..!!!
நம்ம பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும். ஏன் அதற்கான நம்முடைய மெனக்கெடலும் அதிகமாகவே இருக்கும்.
உதாரணமாக முகப் பொலிவிற்காக நாம் பியூட்டி பார்லர் என்று சென்றாலும் அங்கு அது இது என நிறைய பணம் செலவானாலும் சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை, நம் பணம் வீணாவது மட்டும்தான் மிச்சம்.
இதற்கு பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மை அழகுப் படுத்திக் கொள்ள முடியும்.அந்த வகையில் வீட்டில் இருந்தே எப்படி சருமத்தை ஜொலிக்க வைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..
1.முகம் பளபளவென்று மின்ன நாம் தினமும் தூங்கும் முன் சிறிதளவு பாலில் கொஞ்சம் புதினா சாறு கலந்து முகத்தை நல்லா கழுவி விட்டு இதனை தடவி அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவலாம்.
ADVERTISEMENT
2.சருமத்தை ஜொலிக்கவைக்க மதிய வேளையில் தயிர்,எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் வீதம் எடுத்து அதை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து அலச வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மறையும்.
3.வெள்ளரிக்காய் மற்றும் கேரட் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாறை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு கழுவி வர முகம் பளிச்சென மாறும். அதுமட்டுமில்லாமல் அந்த சாறை உள்ளுக்கும் குடிக்கலாம்.
4.ஒரு நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக கைகளால் மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும். இதனை முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கழுவி வர முகம் மென்மையாகவும் கரும்புள்ளிகள் அகன்றும் காணப்படும்.
5. பச்சரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்துக் கொள்ளவும். அந்த பேக்கை முதலில் அப்ளை செய்து காயவிட்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர இக்கோடையில் முகம் கருத்து போவதை தவிர்க்கலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.