ஜெயக்குமார் மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! கடைசியாக வந்த போன் கால்..! திக் திக் நெல்லை..!!
திருநெல்வேலி மாவட்டம் கரைச்சுத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த இவர். பல்வேறு தொழில்களையும் செய்து வந்துள்ளார்.
தொழிலதிபராக விளங்கி வந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த மே 2-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால். ஜெயக்குமார் குடும்பத்தினர், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மே 4ம் தேதி வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் ஜெயக்குமார் உடல் பிணமாக கிடைத்துள்ளது.. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்..,
அதன் பின், ஜெயக்குமார் மரணம் அடைந்தது தொடர்பாக 30 பேருக்கு போலீசர் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து. ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் ஒன்று கிடைத்தது.., அதில் குறிப்பிட்டுள்ள 30 நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.., ஜெயக்குமார் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஜெயக்குமாரின் உடல் கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 78 பேரை விசாரித்துள்ள நிலையில் அவர்களிடமிருந்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், அவரது மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயக்குமார் உயிரிழந்து 4 மணி நேரத்துக்குப் பின் உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படும் ஜெயக்குமார் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் ஏரிக்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த மே 2-ம் தேதி இரவு 10.20 மணியளவில் அவரது செல்போன் எண்ணுக்கு 2 எண்களில் இருந்து போன் கால் வந்துள்ளது. அந்த அழைப்புகளை ஏற்று ஜெயக்குமாரும் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்ட போது அவை சுவிட்ச் ஆப் என காட்டியுள்ளது.
மேலும், மாயமான அன்று ஜெயக்குமார் எடுத்துச் சென்ற 2 செல்போன்களும் இதுவரை போலீசாரின் கைக்கு கிடைக்கவில்லை. ஜெயக்குமார் மாயமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை எல்லாம் வைத்து அந்த மர்ம நபர்கள் யார்..? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்..? இப்போது ஏன் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்கள் என்பது பற்றிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..