ஈரான் நாட்டு அதிபர் ரைசி உயிரிழப்பு..!! விபத்துக்கான காரணம் இது தானா..? 3 நாட்களுக்கு ஈரான் நாட்டில்..!
ஈரான் நாட்டின் அதிபரான ரைசி நேற்று (மே 19) அஜர்பைஜான் சென்று திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் மீட்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் மூலம் இன்று காலை ஹெலிகாப்டரில் வெடித்து சிதறிய உதிரி பாகங்களை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது அவர்கள் கூறியதாவது.., வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் மற்றும் கனமழை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஈரான் நாட்டின் அதிபர் “இப்ராஹிம் ரைசி” நேற்று அஜர்பைஜானில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, பின் ஹெலிகாப்டரில் ஈரான் திரும்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட வானிலை மாற்றம் அதிவேக பலத்த காற்று வீசியதால் ஹெலிகாப்டர் அருகில் இருந்து மலையின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பின்னே மீட்பு படையினரால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஜோல்ஃபா நகரத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது..
ஈரான் நாட்டின் அதிபர் “இப்ராஹிம் ரைசி” விபத்தில் உயிர் இழந்த சம்பவம், அந்நாட்டு மக்கிளடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..