கும்பகோணம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!! மாமியார் நாத்தனார் கைது..! வெளியான அதிர்ச்சி காரணம்..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் ஆரோக்கிய செல்வி தம்பதியினர் இவர்களுக்கு நான்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் பட்டதாரியான ஜெனிபர் வயது (23) இவரும் இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா செங்குடி செங்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜ் இருதயமேரி தம்பதியினரின் மகன் மார்ட்டின் ராஜ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஜெனிபர் வீட்டில் சென்று பேசிய போது 2வது மகளுக்கு திருமணம் செய்யாமல், 3வது மகள் ஜெனிபருக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என ஜெனிபரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு மார்டின் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர். உங்க பொண்ண மட்டும் கொடுங்க போதும் சீர்வரிசை எதுவும் வேண்டாம், நாங்க எங்க வீட்டு பொண்ணு மாதிரி பார்த்துகொள்கிறோம் என நம்பிக்கை கொடுத்தால் ஜெனிபர் குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.
அதன் பின் மார்ட்டின்ராஜ் – ஜெனிபர் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இரண்டாவது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றொர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். திருமணம் முடிந்து பத்து நாட்கள் களித்து மணப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய மார்ட்டின்ராஜ் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
மாமியார் நாத்தனார் செய்த கொடூரம் :
இந்நிலையில் ஜெனிபரின் அக்காவிற்கு நேற்று முன்தினம் அதாவது கடந்த மே 19ம் தேதி குடவாசல் அருகேயுள்ள பருத்தியூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், மற்றும் அவரது மாமியார் இருதயமேரி, நாத்தனார் லவன்சியாமேரி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை பார்த்த ஜெனிபரின் மாமியார் மற்றும் நாத்தனார், அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்து உனக்கு ஏன் இதுமாதிரி சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று கூறி அங்கேயே கடும் சண்டையிட்டுள்ளனர்.
மேலும் சீர்வரிசையுடன் வந்தால் மட்டுமே வீட்டிற்கு வா, இல்லனா உங்க அப்பா வீட்டிலேயே இருந்துக்கோ என கூறி அவர்கள் அங்கேயே விட்டு சென்றுள்ளர். பின் மார்ட்டின் ராஜ்.., எனக்கு காசு பணம் தேவையில்லை என் மனைவி மட்டும் எனக்கு போதும். நான் ஊருக்கு வரும் பொழுது என் மனைவி வீட்டில் இருக்க வேண்டும் என இருதயமேரி, மற்றும் லவன்சியாமேரியை கண்டித்த பின்னரே அவர்கள் ஜெனிபரை வீட்டில் அனுமதிதுள்ளனர்
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர் உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தி தாக்கியதாக தொலைபேசியில் தெரிவித்த போது தொடர்பு பாதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்வம் குறித்து ஜெனிபர் பெற்றோர் பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் ஜெனிபரின் மரணத்திற்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரி மற்றும் லவன்சியாமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் பொறுப்பு அர்ச்சனா நேரில் ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.
2வது மகள் திருமணநாளில் காதல் திருமணம் செய்த 3வது மகள் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..