சுவையான தட்டைப்பயறு சாதம்…!
குழந்தைகள் இந்தமாறி பயறு வகைகளை சாப்பிடவில்லை என கவலைப்படாதீர்கள். எந்தவிதமான பயறாக இருந்தாலும் இப்படி ருசியா சாதம் செய்து குடுங்க அப்படியே மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
தட்டைப்பயறு – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2
அங்குலத்துண்டு பூண்டு பற்கள் – 6
சின்ன வெங்காயம் – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 2
சிறிய துண்டு கிராம்பு – 3
கொத்தமல்லி இலை – சிறிது
1. ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின் அதே மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. சாப்பாடு அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிக் எடுத்துக் கொள்ளவும். பின்னர் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
4. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும். சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வெங்காயத்துடன் ஏற்க்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் தக்காளி விழுதை சேர்த்து அதையும் நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை நன்றாக கலந்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
6. பிறகு ஊறவைத்து வடிகட்டி வைத்துள்ள அரிசியை மசாலாவோடு சேர்த்து கிளறவும். அதில் 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.