40 இடங்களில் திராவிடம் வென்றது..! மதம் வெறி ஓய்ந்தது..! அர்ஜுன்ராஜ் பேட்டி..!
கருத்து திணிப்புகளை திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார்கள், எந்த கருத்து திணிப்பாக இருந்தாலும் அது ஏடுகளில் வருமே தவிர மக்கள் உள்ளங்களில் பிரதிபலிக்காது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்..”
தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களில் திராவிடம் வென்றது மதம் வெறி ஓய்ந்தது என்ற பிறந்தநாள் பரிசை கொடுக்க தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது என்று மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றிலும் இந்திய தேசிய அரசியல் வரலாற்றிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
திருவுருவப்படத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், கொள்கை பரப்புச் செயலாளர் வண்டிய தேவன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், கழககுமார், சுப்பிரமணியன், மா.வை.மகேந்திரன் உள்ளிட்ட கழகத்தின் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் மதிமுக பொது செயலாளர் வைகோ சார்பில் முத்தமிழ் அறிஞருக்கு எங்களது மரியாதையை செய்திருக்கிறோம்.
தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களில் திராவிடம் வென்றது மதம் வெறி ஓய்ந்தது என்ற பிறந்தநாள் பரிசை கொடுக்க தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது என்றார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..