தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு கண்டித்து போராட்டம்..! கைது செய்யப்படும் மாணவர்கள்..!
தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதில் பாலாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய கவால் அலுவலகத்தை சென்றடைந்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மத்திய கலால் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது நீட் தேர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பியுள்ளர். அது தொடர்பாக 21 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..