முதல் மனைவிக்கு தெரியாமல் 17 வயது சிறுமியை திருமணம் செய்த 42 வயது நபர்…. போக்சோவில் கைது…!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பொன்னிறை கீரந்தி கீழத்தெருவை சேர்ந்தவர் அழகேசன். 42 வயதாகும் இவருக்கு, திருமணமாகி வாலண்டினா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில், அழகேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது முதல் மனைவிக்கு தெரியாமல், அந்த சிறுமியை அழகேசன் அவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்த வாலண்டினா, காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ வழக்கு பதிவு செய்து அழகேசனை போலீசார் கைது செய்தனர்.
-பவானி கார்த்திக்