78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அசத்தல் திட்டங்கள்..!!
நம் நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அதற்கு முன் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது..
கொடியை ஏற்றிய பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது., “இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் நல்வாழ்த்துகள்., சுதந்திரத்திற்காக போராடிய நமது தேச தலைவர்கள் எடுத்துரைத்த நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். நம் நாட்டின் நீண்ட விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் . அவர்களை இந்த அரசு போற்றுகிறது. என கூறினார்..
இந்தியாவில் முதலமைச்சர் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் நம் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
நம் மக்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கான திட்டங்களும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் அரசாக தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களது திராவிட மாடல் அரசு சார்பாக இந்த திருநாளில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கவுள்ளோம்..
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வாங்கப்படும் மருந்தின் விலையானது அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால். அதற்கு தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளோம்.
அதற்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியாக அளிக்கப்படவில்லை என்றோ அல்லது மருந்துகள் கிடைக்கவில்லை என்று நினைக்க வேண்டாம்.., அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.., ஆனால் நடுத்தர மக்கள் 40% பேர் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.. அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் கூறினார்..
அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் இந்த திட்டம் செயல்படவுள்ளது.. இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படும்., மேலும் மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
நமது நாட்டிற்காவும்., நமக்காகவும் காலம் நேரம் பார்க்காமல் நம்மை காவல் காத்துக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்கள்.. அவர்கள் உயிரை பொருட் படுத்தாமல் நம்முடைய உயிரை காக்கின்றனர்..
எனவே இராணவு வீரர்களின் பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிமுக படுத்தப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அவர் கூறினார்..
மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எனவும் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் 11 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அவர் கூறினார்
கடந்த மாதம் ஜூலை 29ம் தேதி நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு சார்பில் வழங்கியுள்ளோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு 77 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.., 65 ஆயிரம் இளைஞர்களுக்கு இதுவரை அரசுப் பணி கிடைத்துள்ளது. 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணிகள் கிடைக்கும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..