வயநாடு நிலச்சரிவு… மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
கேரளாவில் கடந்த 30ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.
மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியை வேறொடு அழித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
வயநாட்டில் கொஞ்ச கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பும் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது வயநாட்டில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 6 உடல் பாகங்கள் மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 5 உடல் பாகங்கள், மனிதர்களுடையது என, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்