ஓடும் பேருந்தில் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசார்..!
கடந்த 26-ஆம் தேதி கேரளாவில் இருந்து சென்னை சென்ரலை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினியர் ஒருவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து வந்தார். அதே பெட்டியில் பயணித்த இரண்டு நபர்கள் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் ரயில் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத அந்த 2 நபர்கள் அப்பெண்ணின் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண் அவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர்கள் கழிவறை அருகே ஓடியதை அறிந்த அந்த பெண் துரத்தி சென்றுள்ளார்.
பெண் கழிவறை அருகே வந்ததும் அந்த நபா்கள் கழிவறைக்குள் அந்த பெண்ணை தள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனா்.பின்னர் ரயிலில் இருந்து குதித்து தப்பியுள்ளனர்.
பின்னா் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், அந்தப் பெண் ரயில்வே பாதுகாப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தனிப்படை அமைத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், முன்பதிவு செய்த அந்த ரயிலில் பயணம் செய்தவா்களின் விவரங்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஓடும் ரயிலில் பட்டதாரி பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்