BNY மெலன் வங்கி உயர் அலுவலர்களுடன் பேசிய ஸ்டாலின்…சூப்பர் தகவல்..!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக சில தினங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தார்.
அமேரிக்கா சென்ற முதல்வருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மிகுந்த வரவேற்ப்பை அளித்தனர். அதன்பின்பு பிரான்ஸ், கலிபோர்னியா போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தநிலையில் சிகாகோவில், BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி உலகின் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. BNY மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் கணினி பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.