தலைமறைவாக பிரபல ரவுடி ஆல்வன் என்கவுண்டர்…!! நாகர்கோவில் போலீஸ் அதிரடி..!!
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த தலைமறைவாக பிரபல ரவுடி ஆல்வன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்., அந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் முற்றிலுமாக ரவுடிசத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாநகர காவல் ஆணையர் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
கடந்த செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை பல குற்றங்களில் தேடப்பட்டு வந்த தலைமறைவாக இருந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுடபட்டார்.., இந்த சம்பவம் மற்ற ரவுடிகளிக்கு இடையே பீதியை ஏற்படுத்தியது.. இப்படி இருக்கையில் இன்று நாகர்கோவிலின் பிரபல ரவுடியான ஆல்வன் கொலை செய்யபட்டுள்ளார்..
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது., முக்கியமாக கோவை மாவட்டத்தில் இவர் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி வெல்டிங் குமார் வழக்கில் இவர் சம்மந்தபட்டவர் என்பது குறிப்பிடதக்கது..
இதுவரை ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கு., கட்டப்பஞ்சாயத்து., போதை பொருள் கடத்தல்., உட்பட 13 வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., விசாரணை முடிந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலர்கள் பிடியில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக இருந்ததாக சொல்லபடுகிறது..
இந்நிலையில், தப்பி சென்ற ஆல்வனை பிடிபதற்காக நாகர்கோவில் கமிஷனர் பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து ஆல்வினை பிடிக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்..
அப்போது ரவுடி ஆல்வன் கோவை கொடிசியா அருகே பதுங்கியிப்பதாக தனிப்படை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது., அதன் படி உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அதிகாலை 2: 30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று ஆல்வினை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர்..
காவலர்களை பார்த்த ஆல்வின் எங்கே மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் ராஜ்குமாரின் கையில் வெட்டியுள்ளார்.. அதில் காவலர் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி செல்ல முயன்ற ஆழ்வினை ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.., தற்போது ரவுடி ஆல்வின் மற்றும் காவலர் ராஜ்குமார் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவலர்களுக்கும் ரவுடிக்கும் இடையே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..