ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வெங்கடேச பெருமாள்..!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சுயம்பு மூலவர் வெங்கடேச பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மற்றும் மேற்கு நோக்கி உள்ள மூலவர் வெங்கடேச பெருமாளை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்..
புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் பிரசித்தி பெற்ற மாதகமாக விளங்குகிறது.., அதிலும் இன்றும் புரட்டாசி முதல் சனி என்பதால் இந்த மாதம் முழுவதும் சிறப்பு என்றாலும் புரட்டாசி சனி அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் கூட்டம் அலைமோதும் என சொல்லலாம்.. அதிலும் இன்று புரட்டாசி முதல் சனி என்பதால் பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யபடும்..
அப்படியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் மலையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இங்கு மூலவர் வெங்கடேச பெருமாள் சுயம்புவாக உருவாகி மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
மீனூர் மலை ஸ்ரீ வெங்கடேசபெருமாள் ஆலயத்தில் இன்று முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் அலங்காரத்தில் மூலவர் வெங்கடேச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் உள்ள தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உலகளந்த பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் சேவை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..