“விமானப்படை தினம்..” பிரதமர் மோடி சென்னை வருகை…!!
சென்னையில் நடத்தப்படவுள்ள விமான வான் சாகச நிகழ்ச்சிக்களை கண்டு களிபதற்காக பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார்..
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு விமான வான் சாகச நிகழ்ச்சிகள் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்றது..
இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932 இல் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் நமது சென்னையில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விழாவனது ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை சென்னையில் கொண்டாட இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு பாரதிய வாயு சேனா என்ற தீமின் கீழ் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கொண்டாட்டங்கள் ஆற்றல், சக்தி மற்றும் சார்பின்மை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை உத்தேச நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை மெரீனா கடற்கரையில் வான்சாகச நிகழ்சிகளை பார்வையிட்டு மீண்டும் டெல்லி திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
அதேசமயம் பிரதமர் மோடியின் வருகையையொட்டி அன்று போக்குவரத்துகள் மாற்ற வாய்ப்புகள் இருப்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.. போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்புகள் உறுதி செய்யப்படாததால்.. இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..