தர்மபுரியில் அதிகரிக்கும் கனமழை..!! ஒக்கேனக்கல்லுக்கு விதித்த தடை..!!
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு அருவிகளில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது..
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகள்மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது இன்று காலை 9 மணி நிலவரப்படி 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..