மெட்ரோ திட்டத்துக்கு 65 சதவீத நிதி..!! ஒன்றிய அரசு அறிவிப்பு..!!
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றிய அரசு 65 சதவீத நிதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாயை விடுவிக்க ஒன்றிய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதில் 65 சதவீத நிதி ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து விடுவிக்கப்படும் என நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதில், 33 ஆயிரத்தி 593 கோடி ரூபாய் முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனாக 7 ஆயிரத்தி 425 கோடியும் அடங்கும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 35 சதவீத நிதியை மாநில அரசு மேற்கொள்ளும் என்றும், பன்னாட்டு முகமையிடம் இருந்து பெறப்படும் கடன்கள் ஒன்றிய அரசின் கடனாகவே கருதப்படும் என்றும் நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம் 2-ம் கட்ட பணி..!! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..