4 மணிநேரமாக அவதிக்குள்ளான ஆம்புலன்ஸ்…!! மெரினாவின் வான் சாகசமும்..!! மக்களின் கருத்தும்..!!
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒட்டுமொத்த மக்களும் ஒன்றாக வெளியேறுவதால் மெரினா இருக்கும் சாலை முழுக்க போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறி வருகிறது.
இந்நிலையில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் 4 மணி நேரமாக அந்த கூட்டத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்றது.
விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணமும் பொதுமக்களிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டென்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்துள்ளது.
விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இருக்கின்றன.
முதலில் பாராசூட் சாகச நிகழ்ச்சிகளுடன் ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருவோர் குடை, தண்ணீர் பாட்டில், தேவையான உணவு ஆகியவற்றை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த சாகச நிகழ்ச்சியின் போது சுகோய் விமானங்கள், சூர்யகிரண் உள்ளிட்ட விமானங்கள் வானில் தீபாவளி பட்டாசு போல் நெருப்பை கக்கிக் கொண்டு சென்றன.
இந்த நிகழ்ச்சிக்கு 10 லட்சம் பேர் பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் கண்டு களித்தார்களாம். இந்த கூட்ட நெரிசலால் பலர் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீஸார் ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் மெரினா சாலையில் அந்த மக்கள் கூட்டத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கி 4 மணிநேரமாக அவதிப்பட்டுள்ளதாகவும், 100க்கு போன் செய்து 1 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் வரவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் நாம் மதிமுகம் ரிப்போர்டர் மக்களிடம் வான் சாகசங்கள் குறித்து கேட்ட போது., பலரும் அதனை பார்வையிட 11 மணிக்கு முன்னரே மெரினாவிற்கு வந்ததாகவும்., அதனை உற்சாகத்தோடு கண்டு கழித்ததாகவும் கூறினர்..
மேலும் மக்கள் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை எனவும் இதுபோன்ற நிகழ்சிகள் நடத்தப்படும் போது கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..