உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில், நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், இன்று நாடுமுழுவதும் வெளியாகி நிலையில், வேட்டையன் திரைப்படம் வெளியிடப்பட்டது.
திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னதாக, திரையரங்க வளாகத்தில், ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், ரஜினி பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூர சூடம் ஏற்றியும் , பட்டாசு வெடித்தும், வேட்டையன் ரிலீஸை கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிங்க சுவாமி கோவிலில், சிம்ம மலையில் உள்ள ஸ்ரீ சீனிவாசபெருமாளின் புரட்டாசி மாத பிரம்மோற்சவ நாள் தேர்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி உடன் புஷ்ப அலங்காரத்துடன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இங்குள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலடி அருணா அறக்கட்டளை, நர்சிங் கல்லூரி மற்ரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக மன நல தினத்தை முன்னிட்டு மன நலனை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை திமுக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மன நல நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனநலம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கண்ணன், அரசு அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.