விஜயதசமி பூஜை செய்ய ஏற்ற நேரம்…!! இதை செய்ய மறக்காதீங்க…!
தென்னிந்தியா உலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
அந்த காலத்தில் எல்லாம் போரானது காலை முதல் மாலைக்குள் மட்டுமே நடைபெறுமாம்., மாலைக்கு பின் கூடாரங்கள் அமைத்து., போரின் களைப்பு தெரியாமல் இருக்க ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
அதேபோல தசரா பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தும் விதமாக ஆடிப்பாடியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். அதே போல் துர்கா தேவியின் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கமும் உள்ளது. புதிதாக கலைகள் கற்க துவங்குபவர்களும் இந்த நாளில் தங்களின் பயிற்சியை துவங்குவது வழக்கம்.
விஜயதசமி பூஜை செய்ய ஏற்ற நேரம் :
காலை 06.30 முதல் 08.30 வரை
காலை 10.35 முதல் 01.20 வரை
மாலை 6 மணிக்கு மேல் பூஜைகள் செய்யலாம் … இந்த குறிபிட்ட நேரத்தில் பூஜைகள் செய்து வழிபட்டால் சிறந்தது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..