துணையுடன் சண்டை வராமல் இருக்க இதெல்லாம் தியாகம் செய்ங்க..!
உங்களின் துணையுடன் நீங்கள் சந்தோசமாக வாழ கட்டாயம் தியாகம் என்ற ஒன்றை பின்பற்றியே ஆக வேண்டும். தியாகம் என்பது ஈசியாக ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். உங்களின் துணையிடம் இருந்து நீங்கள் எடுத்துக் கோண்டு மட்டும் இல்லாமல், அவர்களுக்கும் கொடுக்கும் மனப்பான்மையை பெற்றிருக்க வேண்டும். அவற்றில் சிலவற்றை பற்றி பார்போமா..
நேரம்:
இன்றைய காலத்தில் அனைவரின் வாழ்க்கையும் ரொம்ப பிஸியாக போய்கிட்டு இருக்கு, இதில் அடுத்தவருக்கு நேரத்தை செலவிடுவது என்பது மிகவும் குறைவு. ஆனால் உங்களுடைய உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும் எனில் கட்டாயம் அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிடுவது மிகவும் முக்கியம். அப்படி நேரம் ஒதுக்கி செலவிடும்போது மற்ற வெட்டி கதைகளை பற்றி பேசி வீணடிக்காமல் உங்களின் வாழ்க்கையை பற்றி பேசி நேரத்தை செலவிட வேண்டும்.
பணம்:
இன்றைய காலத்தில் திருமணம் என்பது பணத்தின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படுகிறது. இன்றைய இளைஞர்களிடையே பண நிலைமை என்பது தான் ஒரு பெரிய அழுத்தமாக அவர்களின் மனதில் நிலவி வருகிறது. தம்பதிகளிடையே ஒருவர் மட்டுமே செலவிட வேண்டும் எனில் அதில் பெரும்பாலும் சண்டைகள் உண்டாக வாய்ப்பு அதிகம். துணைக்காக பணம் செலவிடுவதும் ஒரு நல்ல மணப்பான்மை தான்.
ஆற்றல்:
உங்களுடைய துணையுடன் தரமான நேரத்தை செலவழிக்க நீங்கள் ஆற்றலை செலவழிக்க வேண்டும். இதற்காக கிடைக்கும் நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும். துணைக்காக ஆற்றலை செலவிடுவது மிகவும் முக்கியம் அப்போதுதான் தேவைப்படும்போது அவர்களுடன் வெளியில் செல்ல முடியும்.
சுயநலம்:
உங்களுடைய திருமண வாழ்வில் உங்களிய பற்றி மட்டுமே அதிகம் சிந்தித்தல் கூடாது. உங்களை பற்றிய கவனம் உங்களிடம் அதிகமாகவே இருக்கும், ஆனால் நீங்கள் உங்களுடைய துணையை பற்றி தான் அதிகம் சிந்திக்க வேண்டும். உங்கள் துணையின் வாதத்தை முயற்சி செய்ய தேவையில்லை, அவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை சொல்லாமல் மாற்றாக மெளனமாக இருத்தலே நல்லது. நீங்களே பேசிக் கொண்டு இருக்காமல் மற்றவர்களையும் பேச அனுமதிக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் மட்டுமே உறவுகளுக்குள் சண்டை வராமல் ஒற்றுமையாகவும் சந்தோசமாக இருக்க முடியும்.