பெஞ்சல் புயல் பாதிப்பு…!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானதை அடுத்து அதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரியில் கரையை கடந்ததால் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது இது புதுச்சேரிக்கு மேற்கே 30 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..