“மரண தண்டனை” பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…!! சட்டத்திருத்த மசோதா அறிமுகம்..!!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய அவர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டால் ஆயுள் தண்டனையும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் மரண தண்டனை விதிக்க படும் என்று தெரிவித்தார். மேலும் ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட திருத்தம் வகை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..