கர்ப்பிணி பெண்களுக்கு துணை நிற்கும்; பெரியாச்சி அம்மன் வரலாறு..!!
பார்வதி தேவியின் அம்சமும், காளிதேவியின் அவதாரமும் கொண்டவர்தான் பெரியாச்சி அம்மன்…,
பெரியாச்சி அம்மன், பெண்கள் கருவுற்றதிலிருந்தே அவர்களுக்கு சுக பிரசவம் அகும் வரை துணையாகவே இருப்பார்.
குழந்தை பிரந்த பின்பும் நோய்கள், தீய சக்திகள் அண்டாமளும் பார்த்துக்கொள்வார்.
முந்தைய காலங்களில் மருத்துவ மனைகள் கிடையாது.., அந்த சமயத்தில் வயதானவர்கள் தான் கற்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பார்கள், கற்பிணி பெண்களின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி உருவி சுக பிரசவம் ஆவதர்க்கு அனைத்தையும் செய்யவார்கள்.., எனவே அவர்களை ஆச்சி என்று அன்போடு அழைப்பார்கள்.
அண்டைய காலத்தில் பாண்டிய நாட்டை வல்ல ராஜா என்ற அரசர் ஆண்டு வந்துள்ளார்.., முனிவர்கள், ரிசிகள், மற்றும் மக்களை துன்புறுத்துவது கொடுமைகள் செய்வது போன்ற செயல்களை செய்து வந்துள்ளான். ராட்சர்களும் தீயசக்திகளும் அவன் கைப்பிடியில் இருந்ததால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை..,
இந்த கொடுமைகளை கண்ட முனிவர், ராஜாவிற்கு சாபம் அளிக்கிறார், ராஜாவிற்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையின் உடல் பூமியை தொட்டுவிட்டால் ராஜாவும் அவன் தேசமும் அளிந்துவிடும் என்று சாபம் தருகிறார்…, குழந்தையின் உடல் பூமியை தொடவில்லை என்றால் ராஜாவை யாரும் எதுவும் செய்ய முடியாது.
நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருந்த, ராஜாவின் மனைவியும் கருவுற.., சாபம் பளித்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார் ராஜா. ராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது, உடனே மந்திரிகளை ஊருக்குள்ளே அனுப்பி ஆச்சிகள் யாரவது இருந்தாள் அழைத்துவரும் படி கட்டளையிடுகிறார்.
ராஜாவிற்கு பயந்து, ராஜாவின் மனைவிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன் வரவில்லை.., இந்த நேரத்தில் தான் காளிதேவியின் அவதாரமான பெரியாச்சியம்மன், வயதான ஆச்சியை போல தோற்றம் எடுக்கிறார்.
பிரசவம் பார்க்க யாரும் முன் வராததால்.., ராஜாவே ஊருக்குள் சென்று ஆச்சியை தேட தொடங்குகிறார்.
பெரியாச்சி அம்மனும் ராஜாவின் அருகே ஆச்சி தோற்றத்தில் வர.., அவரிடம் சென்று ராஜா உதவி கேட்கிறார்.
பெரியாச்சி அம்மனும் நான் உதவுகிறேன் என்று சொல்லி ஒரு நிபந்தனை வைக்கிறார், நான் உதவ வேண்டும் என்றால், பிரசவம் பார்த்து முடித்த பின். நிறைய பொண்ணும் பொருளும் எனக்கு, நீங்கள் தர வேண்டும் என்று கேட்க, ராஜாவும் அதற்கு சம்மதிக்கிறார்..,
பின் அரண்மனைக்கு சென்று, ராணிக்கு பிரசவம் பார்க்க, ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் முழுவதும் குழந்தையை பெரியாச்சி அம்மன் தன் மடிமீதே வைத்து கொண்டுள்ளார். ஒரு நாளை கடந்தும் ராஜாவிற்கு எதுவும் ஆகாததால் குழந்தையின் அருகே சென்றுள்ளார்.
பெரியாச்சி அம்மன்: ராஜா உங்கள் மனைவிக்கு பிரசவம் பார்த்தால் பொண்ணும் பொருளும் தருகிறேன் என்று தானே கூறினீர்கள்,
ராஜா : அதான் குழந்தை பிறந்துவிட்டதே இனி ஏன், நான் உனக்கு பொண்ணும் பொருளும் தர வேண்டும். ஒழுங்காய் ஓடிவிடு, இல்லையே உன்னை கொன்றுவிடுவேன் என்று கூற.., ராஜாவின் மனைவியும் செய்த உதவியை மறந்து பெரியாச்சி அம்மாவை தாக்குகிறார்.
ஆத்திரமடைந்த பெரியாச்சியம்மன், காளி அவதாரம் எடுத்து. ராஜாவை காலின் அடியில் போட்டு மிதிக்கிறார், தாக்க வந்த ராணியையும் மடிமீது வைத்து குடலை உருவி மாலையாக அணிந்து கொள்கிறார். ஆனால் குழந்தையை மட்டும் எதுவும் செய்யாமல், ஒருக்கையில் குழந்தையை ஏந்திய படி நின்று கொண்டுள்ளார்.
சத்தம் கேட்டு பாண்டிய நாட்டு மக்கள் அரண்மனைக்கு வர, ஆக்ரோஷமாய் நிற்கும் காளி அம்மனை பார்த்து, அம்மனின் கோபத்தை தனித்து, இனி நாங்கள், உங்களை தெய்வமாக வணங்குகிறோம். எங்களின் குல தெய்வமாக நீங்கள் இருங்கள் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.
அன்று முதல் இன்று வரை.., கர்ப்பிணி பெண்கள் பெரியாச்சி அம்மனை வணங்கினால் சுக பிரசவம் ஆகும் என்பது உண்மை.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி