நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா 56..!
எஸ்.ஜே.சூர்யா:
இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான எஸ்.ஐே சூர்யா.
தமிழ் சினிமாவில் இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்கிய குஷி திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது.
அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்த அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை என்ற படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார்.
கமர்ஷியல் ஹீரோ:
அதன்பின்பு கமர்ஷியல் ஹீரோவாக கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என அவர் நடித்தாலும் அவரால் கதாநாயகராக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆனால் நண்பன் படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
வில்லனாக எஸ்.ஜே சூர்யா:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் ரகுவரனை போன்றே ஒரு வித வித்தியாசமான சைக்கோத்தனமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிகவும் மிரட்டலாக நடித்திருப்பார்.
அதன்பின்பு தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க களம் இறங்கினார். அது ரசிகர்களையும் ஈர்த்தது. மெர்சல், ஸ்பைடர்,மாநாடு போன்ற திரைப்படங்களில் தருமாறாக வில்லதனத்தை இறக்கி இருப்பார்.
ப்ரேக்:
வில்லதனத்திற்கு சற்று ப்ரேக் விட்டு நடித்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். பயந்த சுபாவம் கொண்ட அதேசமயம் நேர்த்தியான நபராக அசத்தலாக நடித்து படம் முழுக்க நம்மை எதிபார்ப்புடனே வைத்திருப்பார்.
தற்போது இவர் தனுஷின் ராயன் திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக மாறியுள்ள இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.
இப்படி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி மகுடத்தை சூட்டிக்கொண்ட நடிப்பு அரக்கரான எஸ்.ஜே சூர்யா இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்