ஓடும் லாரியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாயம் பொருள்கள் கொள்ளை..!!
விழுப்புரத்திலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த ஓடும் லாரியின் மேற்கூறையை பிரித்து லாரியில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான விவசாய இடது பொருள்களை கொள்ளையடித்த மூன்று நபர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு சாலையில், தனியாருக்கு சொந்தமான பூச்சி மருந்து கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாரி மூலம், விழுப்புரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு கொண்டு சென்ற விவசாய இடுபொருள்கள் கொள்ளையடிக்க பட்டிருப்பதாக தனியார் பூச்சி மருந்து கம்பெனியில் மேலாளர், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் மேற்கு காவல் நிலைய உதவியாளர் மருதப்பன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்,
அதில் இடுபொருட்களை இரண்டு ஈச்சர் மினி லாரி மூலம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கோடீஸ்வரன், ரியாஸ் மற்றும் நெய்வேலி கோவிந்தராஜ் என்ற மூன்று நபர்கள், இரண்டு மினி லாரி மூலம், சாலை மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் மேற்கூறையை(தார்பாயை) பிரித்து 59 பாக்ஸ்களில் கொண்டு சென்ற விவசாய இடுபொருள்கள் கொள்ளை அடித்து உள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு 30 லட்சம் ஆகும் கொள்ளையடித்த 59 பாக்ஸ்களில் 24 பாக்ஸ் விவசாய இடு பொருட்களை விற்பனை செய்த 16 லட்சம் ரொக்க பணததை போலீசார் மீட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பட்ட இரண்டு மினி லாரிகள் மற்றும் ரொக்க பணம் 16 லட்சத்தை கைப்பற்றிய விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.
ஓடும் லாரியில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான விவசாய இடு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபர்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா.., சரக்கு கொண்டு வரப்பட்டது பற்றிய தகவல் கொள்ளை காரர்களுக்கு எப்படி தெரிந்தது என்று காவல் துறையினர் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.