அண்ணாமலை ஒரு பச்சோந்தி..! விளாசிய எடப்பாடி..!
பரமக்குடியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வருகை தந்திருந்தார்.. அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்.
ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா..? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
எடப்பாடி பதில் : “ஓபிஎஸ் அதிமுகவில் இணைய நினைத்தால் கூட, எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே ஓபிஎஸ்-சை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினோம்.
ஓபிஎஸ் விசுவாசமாக இருந்ததாக வரலாறு எதுவும் இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது, கூட வெண்ணிற ஆடை நிர்மலா எதிர்த்து போட்டியிட்டதற்கு சீஃப் ஏஜென்ட் ஆக ஓபிஎஸ் செயல்பட்டார்.
நாங்கள் ஒன்றாக செயல்பட்ட போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன ஓபிஎஸ்., யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரணை செய்ய தொடங்கினோம் விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார்.
சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என ஓபிஎஸ் கேட்டார். 97 சதவீதம் பேர் அப்போது எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியை கொடுத்தோம்.
கடந்த 2019-ம் ஆண்டு தேனியில் அவர் மகன் போட்டியிட்டதற்கு அங்கு மட்டும் தான் வேலை பார்த்தார், மற்ற தொகுதிகளில் அவர் எட்டி கூட பார்க்கவில்லை.
கட்சியைப் பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலைப்பட்டார். ஒற்றைத்தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை.
அதன் பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார். பொதுக்குழு கூடி நடவடிக்கை எடுத்து ரவுடிகளை வைத்து கட்சியினரைத் தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சூறையாடி திருடிச் சென்றனர். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலிலாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீகிதம் வாய்ப்பு கூட இல்லை” எனக் கூறினார்.
அண்ணாமலை உங்களை ஒரு துரோகி என சொல்லுகிறார் அதற்கு உங்களின் கருத்து என்னவென்ற கேள்விக்கு..?
“அண்ணாமலை ஒரு பச்சோந்தியாக இருக்கும் போது, என்னை துரோகி என்று சொல்லலாமா. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை.. எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பார்த்து கொண்டு இருப்போம்.
எங்களை ஆளாக்கிய தலைவர்களைப் பற்றி பேசினால் ரோஷமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும். அண்ணாமலை கட்சித் தலைவர் பதவிக்கு தகுதி அற்றவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்மென்டில் வரவில்லை. கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து மேலே வந்தோம்.. என கடுமையாக சாடினார்.
– லோகேஸ்வரி.வெ