எண்ணெய் சருமத்தால் அவதிபடுபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கு தான்.
பொதுவாகவே நம் சருமத்தில் சில சமயம் எண்ணெய் வடிவது இயல்பு. ஆனால் ஒரு சிலருக்கு, எண்ணெய் சருமம் இயற்கையாகவே இருக்கும்.
அதை கட்டுப்படுத்துவது முடியாத காரியம் ஒன்றுமில்லை. அதை சரி செய்ய, சில வழிமுறைகள் இருக்கிறது.
தக்காளி : சருமத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. வாரத்தில் மூன்று முறை தக்காளியை இரண்டாக வெட்டி, முகம் முழுவதும் பூசி 5 நிமிடத்தில் கழுவி விட வேண்டும். அப்படி செய்தால், எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.
கருபுள்ளி மறைய : கரும்புள்ளி இருக்கும் இடத்தில். தக்காளியின் தோலை தேய்த்து, 15 நிமிடத்தில் கழுவி விட வேண்டும். வாரத்தில் இரு முறை, இப்படி செய்தால் கரும்புள்ளி மங்கி விடும்.
தோல் : வெயிலில் நாம் அதிக நேரம் செல்லும் பொழுது, தோலின் நிறம் மாறிவிடும். தோலின் நிறம் மாறாமல் இருக்க, தக்காளியுடன் வெள்ளரிக்காயை சேர்த்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.
தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் எ, சத்து அதிகம் இருப்பதால். உடலை குளிர்ச்சியாகவும், வைத்துக்கொள்ள உதவுகிறது.