சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி.. இறுதியில் வாலிபருக்கு நடந்த சோகம்…!
மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தரராஜ் இவர் வீட்டில் இருந்தே டிரேடிங் மார்க்கெட்டிங் பணியை மேற்கொண்டு வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கடந்த 26ம் தேதி ஆனந்தராஜின் தந்தை மேலபனங்காடியில் உள்ள ஹோட்டலில் இருந்து செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார்.
இதனை அன்று இரவு ஆனந்தராஜ் தனது குழந்தையுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது சிக்கன் கிரேவி மீதம் இருந்ததால் மறுநாள் காலையில் எழுந்த ஆனந்தராஜ், சிக்கன் கிரேவியை சுடவைத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார்.
இதனை சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் ஆனந்தராஜை பிபி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தொடர்ந்து ஆனந்தராஜ் நலமாகி வீடு திரும்பினாலும் கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனை தீரவில்லை. இதையடுத்து கடந்த 28 ம் தேதி அவருக்கு மீண்டும் அருகில் இருன்ந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த பின்னர் வீடு திரும்பிய ஆனந்தராஜ் திடீரென்று அன்று மாலை மயங்கி உள்ளார்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு மீண்டும் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் ஆனந்தராஜின் உடல்நலக்குறைவுக்கு சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி தான் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடற்கூறு ஆய்வுகாக ஆனந்தராஜ் உடலை அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்