தொடரும் நகை திருட்டு..!! மர்ம நபர்கள் போலீஸில் சிக்கியது எப்படி..?
வேலூர் அருகே மூன்று சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பல்லி பகுதியை சேர்ந்த சுகுணா என்பவரது வீட்டின் கதவை உடைத்து அலமாரியில் இருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும் கால் கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சுகுணா குடியாத்தம் தாலுகா காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதனிடையே மோடிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் மருதுபாண்டி என்பதும் சுகுணா வீட்டில் திருடியது அவர்கள் தான் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த மூன்று சவரன் நகை , கால் கிலோ வெள்ளி , இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..