துவரம் பருப்பு ரசம் ரெசிப்பி..!
துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
கல் உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 1/2 கப்
எலுமிச்சைபழச்சாறு
கொத்தமல்லி இலை
நெய் – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பருப்பை சுத்தம் செய்து அலசி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த பருப்பு,மிளகாய்,இஞ்சி,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து கலந்துக் கொண்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து அதில் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து பின் அடுப்பை அணைத்து அதில் காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை ரசத்தில் கலந்து விடவும்.
ரசத்தில் கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான துவரம் பருப்பு ரசம் தயார்.