கடனை திருப்பி தர தாமதம்..!! 10 நாட்கள் சித்ரவதை செய்த கந்து வட்டிக்காரர்…!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தஆட்டு வியாபாரி ஜபரூல்லா. தொழில் ரீதியாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் தீபன் என்பவரிடம் கடனாக சிறுக சிறுக சுமார் 22லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களாக வட்டியும் அசலும் தராத காரணத்தினால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீபன், ஜபரூல்லா வீட்டிற்கு சென்று. வீட்டின் ஆவணங்கள் எடுத்து சென்றதோடு, வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வலியுறுத்தி ஜபரூல்லாவை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ஜபரூல்லா ஆரணி அருகே பெரணமல்லூர் கிராமத்தில் தனது நண்பர் ராஜசேகர் வீட்டில் பதுங்கி உள்ளதை அறிந்த தீபன், தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் சென்று தலைமறைவாக இருந்த ஜபரூல்லாவை கடுமையாக தாக்கி காரில் கடத்தி கொண்டு கம்ம சமுத்திரம் மாந்தோப்பு பகுதியில் ஜபரூல்லாவை அடைத்து வைத்து பைப் மற்றும் கம்பால் பலமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் இறுதியாக ஆரணி சூரியகுளம் அருகில் உள்ள தீபனின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவில் அழைத்து வந்து அடைத்துள்ளனர். இது சம்மந்தமாக ஆரணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆரணி டி.எஸ்.பி பாண்டீஸ்வரி தலைமையில் தனிப்படை போலீசார் சூரியகுளம் பகுதியில் ஓரு வீட்டு மேல் மாடியில் அடைத்து வைத்திருந்த ஜபரூல்லாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டின் உரிமையாளர் அபிஷேக் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவான தீபன் உள்ளிட்ட 3பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான அடையாளம் தெரியாத 4பேரை போலீசார்தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கபட்ட ஜபரூல்லா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில் தீபன், தன்னை நிர்வாணபடுத்தி தாக்கியதாகவும், கஞ்சா புகை பிடிக்க வற்புறுத்தியும் சுமார் 10பேர் தன்னை பைப் மற்றும் தடியால் தாக்கிய தாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தீபன் தான் காரணம் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..