“இந்திக்கு வக்காலத்து” தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு துணை முதலமைச்சர் பதிலடி..!!
சென்னையில் நேற்று இந்தி தின விழாவானது தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழா துவக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்ப்பட்டது…
அப்போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்”, என்ற வரிகள் மட்டும் இடம் பெற வில்லை. தமிழ்நாட்டில் எந்த ஒரு விழாவானது தொடங்கினாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவது வழக்கம்.. அப்படி இருக்கையில் வரிகள் விடுபடுவதும் கடும் கண்டனத்துக்குரியது என சர்ச்சைகள் எழத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி., தொல்.திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்..
இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் ஒலிக்காதது குறித்து பேசிய கருத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்…
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது. ஒன்றிய அரசின் ‘டி.டி.தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. என இவ்வாறே அவர் கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..