அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்
வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.எஸ்.மணியனின் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேதரத்தினத்தை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
இதனிடையே ஓ.எஸ்.மணியன் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய வேதரத்தினம், இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.