குட் பை மோடி, குட் பை பாஜக..! விமர்சித்த அரசியல் பிரமுகர்கள்..! கடுப்பான பாஜக..!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், நாளை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று, ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தியானம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படித்தான், கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போதும், பிரதமர் மோடி உத்தரகாண்ட் கேதர்நாத்திற்கு சென்று தியானம் செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரியமான தொப்பியை தலையில் அணிந்து கொண்டு, காவி துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ந்து தியானம் செய்தார். அதன் பின் தற்போது கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெரும், மீண்டும் மோடியே பிரதமராக அறிவிக்கப்படுவார் என பாஜக தெரிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் ஆசையில் மண்ணை அள்ளி கொட்டுவது போல, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு படி மேலே போய், தினம் தினம் பாஜகவை விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். மேலும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இப்போது கூட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம், முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது போல இருப்பதாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.
ஆனால், முதல்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் வெளிவர தொடங்கியது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அவர்கள் கொடுத்த பல வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவே இல்லை. உதரணத்திற்கு விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி., விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பாஜக ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது.
இந்த அலையினாலே மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டில் தேர்தல் முடிந்து போன கதையாகும்.
அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியின் ஆட்சியை உடைத்து அவருக்கு பாடம் புகட்டுவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இந்தியா கூட்டணி ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“4ம் தேதிக்கு பிறகு குட் பை மோடி, குட் பை பாஜக” என ராகுல் காந்தி நேற்று சொல்லியிருந்ததே, பாஜகவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. என செல்வப்பெருந்தகை பாஜகவையும் மோடியையும் விமர்சித்து பேசியது, பாஜகவினர் இடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ