“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” போட்டியில் இருந்து விலகும் வினேஷ் போகத்..” அதிர்ச்சியான ரசிகர்கள்..!!
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் 206 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்..
அதில் பெண்கள் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று முன்தினம் களம் இறங்கினார். தல் சுற்றில் உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஜப்பானின் யு சுசாகிக்கு அதிர்ச்சி அளித்தார்.. சர்வதேச போட்டிகளில் 82 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சுசாகியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலேயே ஒட்டுமொத்த கவனத்தையும் வினேஷ் போகத் ஈர்த்தார்.
தொடர்ந்து கால்இறுதியில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சையும், அரைஇறுதியில் 5-0 என்ற கணக்கில் பான்அமெரிக்க சாம்பியன் கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனையும் போட்டுத் தாக்கி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தயது.
இந்நிலையில் மல்யுத்த போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அம்மா, மல்யுத்த போட்டியில் நான் வெற்றி பெற்றேன், இருந்தாலும் நான் தோற்றேன். என்னை மன்னித்துவிடு. உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 … உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்…” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..