நான் மீண்டும் சேவை செய்ய வருவேன்..! உடல்நலம் குறித்து வைகோ பதிவு..!
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த மே 26ம் தேதி அன்று வீட்டில் கால் தவறி விழுந்து எலும்பு பட்டையில் தோல்முறிவு ஏற்பட்டது.. அதன் பின் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பின் அவர் நலமுடன் வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வாருங்கள் என கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி விழுந்த தகவலறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்மைச்சர் ஸ்டாலின் கூறியதாக துரைவைகோ தெரிவித்திருந்தார்.
மேலும் அவரது உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ், இப்போது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.
எனவே, அவர் பற்றி வெளிவரும் எந்த பொய்யான செய்திகளையும் நம்ப வேண்டாம். புறந்தள்ளுங்கள். மருத்துவமனை நிர்வாகத்துக்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வரக் கூடாது என்பதால், யாரும்தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பிய பிறகுகட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்கலாம். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நான் நலமாக இருக்கிறேன் பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன்.., என மதிமுக பொதுச்செயலாரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நான் ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் வரை நடந்திருக்கிறேன் ஆனால் ஒருமுறை கூட நான் கீழே விழுந்தது இல்லை. நான்கு நாட்களுக்கு முன் நெல்லைக்கு சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படியின் மேல் ஏறாமல் பக்கத்தில் இருந்த திண்ணை மீது ஏறிய போது சாய்ந்துவிட்டேன்.
இதனால் தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.., இன்னும் சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சை நடைப்பெற உள்ளது.. நான் நலமுடன் வீடு திரும்புவேன் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக சேவை செய்ய, நான் மீண்டும் வருவேன். எனக்காக வருந்தும் உள்ளங்களுக்கு நன்றி என வைகோ தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..